எண்ணெய்வித்து பயிர்கள்
முன்னுரை
ஆமணக்கு சாகுபடி செய்யும் நாடுகளிலேயே இந்தியா உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளது. ஆமணக்கின் தாயகமாக எத்தியோப்பியாவை கருதினாலும் இந்தியாவில்தான் ஆமணக்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆமணக்கு பயிரிட்ட நான்கு மாதம் முதல் ஆறு மாதம் காலத்தில் அறுவடைக்கு வரும். வறட்சி நன்கு தாங்கி வளரும்...ஆமணக்கு செடி எப்பொழுதும் பசுமையோடு இருக்கும் ஒரு வகையான புதர்ச் செடியாகும்.பத்து மீட்டர் உயரம் வரையில் வளரும் இந்தச் செடி பல பருவ தாவரமாகும்.இதன் தண்டுப் பகுதியில் வெண்மையான மாவு படிந்து காணப்படும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் தரிசு நிலங்களிலும் இவை நன்றாக வளர்கின்றன. விவசாயிகள் அனைவரும் ஆமணக்கு சாகுபடி செய்து அதிகலாபம் பெறலாம்.
ரகம்
பச்சை மற்றும் வீரிய ஒட்டு ரகங்கள் ஏத்தாப்பூர் 1
பட்டம்
ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்
விதையளவு
ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை தேவைப்படும்
விதைநேர்த்தி
1 கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து வைக்கவும்
உயிர் உர விதை நேர்த்தி
200 கிராம் அசேஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா இரண்;டையும் ஆரிய அரிசி வடிகஞ்சி 200 மில்லியில் கலந்து விதைநேர்த்தி செய்யலாம்.
நிலம் தயாரித்தல்
ஏர்க்கழப்பையாக இருந்தால் 4 உழவுகள், டிராக்டராக இருந்தால் 5 உழவுகள் போட்டு மண்ணை பொதுபொதுப்பாக வைத்திருக்க வேண்டும். மண்ணில் கட்டிகள், கல், பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் எடுத்து அப்புறப்படுத்த வேண்டும்.
அடியுரம்
தொழுவுரம் ஒரு ஏக்கருக்கு மக்கிய தொழுவுரம் 4 டன் போடவேண்டும் ஒரு ஏக்கருக்கு மானாவாரி பயிராக இருந்தால் 45 கிலோ தழைச்சத்து, 45 கிலோ மணிச்சத்து, 45 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். இறவை பயிருக்கு 60 கிலோ தழைச்சத்து, 30 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.
நடவு முறை
ஆட்கள் மூலம் கையால் நடுதல் வேண்டும்
பயிர் இடைவெளி
வரிசைக்கு வரிசை 4 ஆடி செடிக்கு செடி 4 இடைவெளி விட வேண்டும்.
நுண்ணுரம்
எண்ணெய் வித்து நுண்ணுரம் 2 கிலோ வை 20 கிலோ மணலுடன் கலந்து விதை நடவு செய்த 15 நாட்களுக்குள் வயலில் ஈரம் இருக்கும் பொழுது தூவி விட வேண்டும்.
நீர் நிர்வாகம்
10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்
களை நிர்வாகம்
30ம் நாள் ஆட்கள் மூலம் ஒரு களை வெட்டி கட்டுப்படுத்தலாம்;
குருத்துப் புழு
தாக்குதலின் அறிகுறி
புழுக்கள் முதலில் குருத்துக்களைக் குடைந்து தாக்கி கழிவுப் பொருட்களை வெளித்தள்ளிகொண்டு இருக்கும். தாக்குதல் இருந்தால் செடி காய்ந்து விடவும் வாய்ப்புண்டு. இப்புழுக்கள் காய்களைப் பிணைத்து குடைந்து சென்று விதைகளை தாக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
தாக்கப்பட்ட குருத்துக்களையும், காய் கொத்துக்களையும் பிடுங்கி அழிக்கவேண்டும். குவினல்பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி அல்லது குளோரிபைரிப்பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி இதில் ஏதாவது ஒன்றை மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
அசுவினி
தாக்குதலின் அறிகுறி
இலையின் அடிப்பகுதியில் கருப்பாக கூட்டம் கூட்டமாக இருக்கும் எறும்புகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும்.
கட்டுப்படுத்தும்முறை
அதிகம் தாக்கப்பட்ட செடிகளை எடுத்து விட வேண்டும் இமிடாகுளோர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி என்ற அளவில் மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
காவடிப்புழு
தாக்குதலின் அறிகுறி
இலைகளை வெகுவிரைவாக தின்று அழித்துவிடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
புழுக்களை சேகரித்து அழித்தல். ஒருலிட்டர் தண்ணீருக்கு குளோரிபைரிபாஸ் 4 மில்லி அல்லது குவினல்பாஸ் 4 மில்லி இதில் ஏதாவது ஒன்றை மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
புரோட்டினீயா புழு
தாக்குதலின் அறிகுறி
பல பயிற்களைத் தாக்கும் இப்பூச்சி விரும்பி முட்டையிடும் பயிர் ஆமணக்குதான்.
இலை,காயில் இப்புழுக்கள் கூட்டம் கூட்டமாக இருந்து இலையை தின்று சல்லடையாக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
இனக்கவர்ச்சிப் பொறிகளை ஒரு ஏக்கருக்கு 5 இடத்தில் வைத்து ஆண் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். விளக்குப் பொறி 2 இடத்தில் வைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம்.
அல்லது
ஒருலிட்டர் தண்ணீருக்கு குளோரிபைரிபாஸ் 4 மில்லி அல்லது குவினல்பாஸ்; 4 மில்லி இதில் ஏதாவது ஒன்றை மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
தத்துப்பூச்சி
தாக்குதலின் அறிகுறி
தத்துப்பூச்சி ஆமணக்கு இலை மற்றும் பயிரில் உள்ள சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும், இலைகள் சுருண்டு காணப்படும்.
கட்டுப்படுத்தும்முறை
ஒரு லிட்டர் தண்ணீருக்கு இமிடாகுளோர் 1 மில்லி என்ற அளவில் தெளித்த கட்டுப்படுத்தலாம்.
முக்கிய குறிப்புகள்
சுருள் பூச்சி
சுருள் பூச்சியை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு 5 சதம் (அ) ட்ரைகோபாஸ் 2.5 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
கம்பளி ரோமப்புழு
கம்பளி ரோமப் புழுவை கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் அல்லது மோனோகுரோட்டபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் முட்புழுவையும் கட்டுப்படுத்தலாம்.
இலைப்பேன்
இலைப்பேனை கட்டுப்படுத்த டைமீத்தேயேட் (அ) மெதில் டெமட்டான் (அ) மோனோகுரோட்டபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
செதில்பூச்சி
மோனோகுரோட்டபாஸ் 320 மிலி, வேப்பம் எண்ணெய் 1 லி, காதி தூள் 1 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து செதில்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடைத் தொழில் நுட்பம்
ஒரு குலையில் ஒரு காய், இரண்டுகாய் வெடித்திருந்தால் அவற்றை அறுவடை செய்து இரண்டு அல்லது மூன்று நாள் மூடிவைத்திருந்து பிறகு காயவைக்க வேண்டும். அவற்றை காய்ந்த பிறகு செங்கள, அல்லது பலகை கொண்டு தேய்த்து விதைகளை பிரித்தெடுக்கலாம். அல்லது கடலை உடைக்கும் இயந்திரம் கொண்டு விதையை பிரித்து எடுக்கலாம்.
குறிப்பு ஒட்டுச் செடி காய் வெடிக்காது
முடிவுரை
ஆமணக்கு சாகுபடி செய்வதால் குறைந்த நாட்களிலேயே மகசூல் கொடுக்கக் கூடியது. செலவும் குறையும் பூச்சி நோய் தாக்குதல் அதிகம் இருக்காது மானாவாரிக்கும் ஏற்றது. வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது. இவற்றை தனிப்பயிராகவும் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம்.