பணப்பயிர் சாகுபடி
முன்னுரை
பருத்தி ஒரு பணப்பயிராக இருப்பதால் விவசாயிகள் தன் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். பருத்தி சாகுபடி செய்யும் போது அவற்றில் சாறுஉறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிக சேதத்தை உண்டு பண்ணுகிறது இவற்றை தடுக்கவும் மண்வளத்தை பாதுகாக்கவும் முடிந்த அளவு செலவை குறைத்து இயற்கை முறையில் சாறுஉறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தி அவற்றிலிருந்து பயிரை பாதுகாப்போம்.
சாறு உறிஞ்சும் பூச்சியின் வகைகள்
அசுவிணி, வெள்ளை ஈ, இலைப்பேன், தத்துப் பூச்சி போன்றவை பருத்தியில் அதிகமாக காணப்படும்
அசுவுனி
வாழ்க்கைப் பருவம் தாய்ப் பூச்சியானது 2-3 வாரங்கள் வரை உயிர் வாழும். ஓரு நாளில் 8 முதல் 22 குஞ்சுகள் பொறிக்கும். இனச்சேர்க்கை இல்லாமல் இறக்கையுடனோ அல்லது இறக்கை இல்லாமலோ குஞ்சுகளை உற்பத்தி செய்யும். குஞ்சுகளின் பருவம் 7-9 நாட்கள், ஒரு வருடத்திற்கு அதன் வாழ்க்கையில் 12 - 14 முறை குஞ்சுகள் பொறிக்கும் தன்மையுள்ளது
தாக்குதலின் அறிகுறிகள்
அசுவுனியின் தாக்குதல் மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தீவிரமாக காணப்படும். அசுவுனி கருப்பு, அல்லது பழுப்பு நிறத்திலும் அதன் குஞ்சுகள் மஞ்சள் அல்லது பச்சை நிறத்திலும் இருக்கும். இவைகள் இளம் இலைகளின் அடிப்பகுதியிலும், குருத்துக்கள், மொட்டுக்களில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இலை மேல் நோக்கி சுருண்டு விடும். இலையிலுள்ள பச்சையத்தை உறிஞ்சுவதால் இலைகள் வெள்ளை நிறமாக மாறும். நுனி மொட்டுக்களில் சாறுகளை உறிஞ்சவதால் மொட்டுக்கள் வடிவம் ஒழுங்கற்று மாறி கொட்டிவிடும்.அசுவுனிகள் வெளியிடும் கழிவுப் நீர் போன்ற திரவத்தை உண்பதற்காக எறும்புகள் வந்து மொய்க்கும். இதனை உற்று கவனித்தால் அசுவுனியின் தாக்கத்தைக் காணலாம். இதனால் ஏற்படும் பொருளாதார சேதநிலை 15-20 சதவீதம் ஆகும்.
கட்டுப்படுத்தும் முறை
இரசாயன முறையில் கட்டுப்படுத்த
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி இமிடாகுளோர், அசிபேட் 2 கிராம் கலந்து காலை மற்றும் மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
உயிரியல் கட்டுப்பாட்டு முறை
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வெர்டிசீலியம் மற்றும் பிவேரியா என்னும் பூஞ்சாணங்களை ஒன்றாகக் கலந்து காலை மற்றும் மாலை வேளையில் தெளித்க்கலாம்.
வெள்ளை ஈ
சிறிய கொசு போன்ற வெண்ணிற பூச்சிகளும் அவற்றின் இளம் பருவங்களும் இலையின் அடிப்பரப்பில் காணப்படும்.வெள்ளை ஈயின் இளம் குஞ்சுகளும் வளர்ந்த ஈக்களும் இலையிலிருந்து சாறு உறிஞ்சுவதால் இலைகள் சுருண்டு மஞ்சள் நிறமாக மாறுகிறது கோடைகாலத்தில் அதிகமாக காணப்படும்.
வாழ்க்கைப் பருவம்
இப்பூச்சியானது ஆண்டு முழுவதும் இனவிருத்தி செய்யும். பெண் ஈ இளம் தளிர் இலைகளின் அடிப் பகுதியில் மஞ்சள் நிற முட்டைகளை இடும். முட்டையில் இருந்து ஒரு வார காலத்தில் குஞ்சுகள் வெளிப்படும். குஞ்சுகள் நீள் வட்ட வடிவில் இருக்கும். இலையின் அடிப்பகுதியில் அசைவற்று ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். இது முழு வளர்ச்சி பெற 14-28 நாட்கள் ஆகும். ஓரு ஆண்டில் 12-15 வாழ்க்கை முறை இருக்கும். வளர்ந்த ஈ வெள்ளை நிற இறக்கைகளுடன் இருக்கும்.
தாக்குதலின் அறிகுறிகள்
இளம் குஞ்சுகளும் வளர்ந்த ஈக்களும் இலையின் அடிப் பாகத்தில் வெண்மை நிறத்தில் காணப்படும் இலையின் சாற்றை உறிஞ்சி சேதத்தை உண்டு பண்ணும். வெள்ள ஈக்கள் அதிக அளவில் சேதம் தரும் நிலையில் இலைகள் வளர்ச்சி பெறாத நிலையிலேயே காய்ந்து கருகி உதிர்ந்து விடும். நாளடைவில் மொட்டுகளும், மலர்களும் உதிர்ந்து விடும். செடியின் வளர்ச்சி குன்றிவிடும். தாக்கிய காய்கள் வெடிக்காது. பஞ்சின் தரம் குறைந்து விடும். வெள்ளை ஈ கழிவுத் திரவத்தை வெளியிடுவதால் பஞ்சின் தரம் குறைகிறது. வெள்ளை ஈ கோடைகாலங்களில் அதிகமாக தென்படும். மேலும் இது நச்சுயிரி நோயை பரப்ப வல்லது. பொருளாதார சேத நிலை 10 லிருந்து 20 சதவீதமாகும்.
கட்டுப்படுத்தும் முறை
ஊடுபயிர் சாகுபடி
உயிரியல் கட்டுப்பாட்டு முறை
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வெர்டிசீலியம் மற்றும் பிவேரியா என்னும் பூஞ்சாணங்களை ஒன்றாகக் கலந்து காலை மற்றும் மாலை வேளையில் தெளித்க்கலாம்.
இரசாயன முறையில் கட்டுப்படுத்தும்முறை
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் பிரைடு அல்லது அட்டாரா 5 கிராம் கலந்து மாலை வேலையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இலைப்பேன்
வாழ்க்கைப் பருவம்
இலைப்பேன் மஞ்சள் நிறமுடைய தட்டையான மிகச்சிறிய பூச்சியாகும். வாரத்திற்கு இப்பூச்சிகள் 50-60 முட்டைகளை செடிகளில் இலைகளில் இடும். முட்டையிலிருந்து 5 நாட்களில் குஞ்சுகள் வெளிவரும். குஞ்சுகளின் வாழ்க்கை பருவம் 5 நாட்கள். அதற்கு பின்பு கூட்டுப் புழுப் பருவம் 2 நாட்கள் ஆகும். கூட்டுப் புழுவாக இருப்பது 3-4 நாட்களில் இலைப்பேனாக மாறும் ஒரு ஆண்டில் அதிக வாழ்க்கை சுழற்சியினை கொண்டது.
தாக்குதலின் அறிகுறி
இலைப்பேனின் குஞ்சுகள் மற்றும் தாய்ப் பூச்சிகள் இலைகளைச் சுரண்டி சாற்றை உறிஞ்சுகின்றன. முதலில் அடிப் பாகம் பளபளப்பு அடைந்து வெள்ளி போன்ற புள்ளிகள் தோன்றும். இதனால் இலைகள் நன்கு விரிவடையாமல் மேல் நோக்கிச் சுருளும். சில சமயங்களில் இலைகள் மொர மொரப்பு அடைந்து சிவப்பு கலந்த பழுப்பேறி உதிர்ந்து விடும். (இதையே செம்பான் நோய் என்பர்) நல்ல மழை பெய்தால் இலைகளிலிருந்து இப்பூ10ச்சிகள் எளிதில் அழிக்கப்படும்.
கட்டுப்படுத்தும் முறை
இரசாயன முறையில் கட்டுப்படுத்த
ஒரு லிட்டர் தண்ணீருக்கு புரப்பனாபாஸ் 2 மில்லி மற்றும் நிம்பிசிடின் 2 மில்லி கலந்து அடிக்கலாம்
தத்துப்பூச்சி
வாழ்க்கைப் பருவம்
தத்துப்பூச்சி சிறிய பச்சை நிறமுடைய பெண் தத்துப்பூச்சி மஞ்சள் நிறமுடைய முட்டைகளை இலையின் அடிப்பகுதியில் உள்ள நரம்புகளில் இடும். முட்டையிலிருந்து 4-5 நாட்களில் குஞ்சுகள் வெளிப்படும். குஞ்சுகள் 10-15 நாட்களில் தாய்ப்பூச்சிகள் மாறும். பின்பு தாய் தத்துப்பூச்சி 2-3 வாரங்கள் வரை உயிர்வாழும். ஒரு வருடத்தில் 7-8 முறை வாழ்க்கை சுழற்சி இருக்கும்.
தாக்குதலின் அறிகுறிகள்
தத்துப்பூச்சி இலையின் அடிப் பாகங்களிலும், இளம் குருத்துகளிலும் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி உண்ணும். இதனால் இலைகள் சிகப்பு அல்லது பழுப்பு நிறமாகி கீழ் நோக்கி சுருளும். அதிகம் சேதாரம் அடைந்த நிலையில் இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக தாக்குதல் காணப்படும். இதனால் ஏற்படும் பொருளாதார சேதநிலை 20 - 30 சதவீதம் ஆகும்.
கட்டுப்படுத்தும் முறை
(இவை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
இரசாயனமுறையில்
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி இமிடா குளோரைடு மற்றும் அசிபேட் 2 கிராம் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
தாவர இலைச்சாறு தயாரிக்கும் முறை
ஒவ்வொரு வகைகளிலும எளிதாக கிடைக்கக் கூடிய ஏதாவது ஒரு தாவரத்தை ஒரு கிலோ அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறாக ஐந்து வகைகளிலும் சேர்த்து ஒரு ஏக்கருக்கு 5 கிலோ இலைகள் இருந்தாலே போதும்.
செய்முறை
கோமியம் - பூச்சிகளை விரட்டும் மற்றும் தாவர இலைகளை நொதிக்க வைக்கும்
பெருங்காயம் - பூக்கள் உதிர்வதை தடுக்கும்
தாவர இலைச்சாறு - பூச்சிகளை உண்ண விடாமல் விரட்டும்
இவற்றை பயிர் நடவு செய்த 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து தெளித்து வந்தால் மேலே உள்ள பூச்சிகளை வரவிடாமல் தடுக்கலாம் அவற்றின் தாக்குதல் இல்லாமல் இருந்தாலே நல்ல மகசூல் கிடைக்கும் இவை இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.
தொகுப்புரை
விவசாயிகள் பூச்சியின் வகையையும் மற்றும் அதன் தாக்குதலை கண்டறிந்து ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறையை கையாண்டால் இடுபொருள் செலவினைக் குறைக்கலாம் பூச்சி தாக்குதலினால் ஏற்படும் மகசூல் இழப்பிணை குறைத்து வருமானத்தை அதிகரிக்கலாம்.