இயற்கை இடுபொருட்கள்
முன்னுரை
அரப்பு மோர் கரைசல் நம்பகுதியில் கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்து எளிய முறையில் தயாரிக்கப்படும் பயிர் வளர்ச்சி ஊக்கியாகும். இவற்றை நம்முடைய வயலில் தெளிக்கும் பொழுது மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை பெருக்குகிறது. மண்வளத்தை பாதுகாக்கவும் அரப்பு மோர் கரைசல் பெரிதும் உதவுகிறது. ஆகவே நாம் மண்ணை வளமாக வைத்துக்கொள்வதன் மூலம் மனிதர்கள் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. பூச்சி மற்றும் பூஞ்சான நோய்களை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
அரப்பு மோர் கரைசல் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்
அரப்பு இலை (உசிலை மர) இலைகளை - 2 கிலோ
புளித்த மோர் - 5 லிட்டர்
தண்ணீர் - 5 லிட்டர்
தயாரிக்கும் முறை
முதலில் உசிலை மர இலைகளை ஒரு கிலோ முதல் 2 கிலோ பறித்து வந்து தேவையான நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். அதில் இருந்து 5 லிட்டர் கரைசல் எடுக்கனும்.
உசிலை மர இலைக் கரைசல் 5 லிட்டருடன் 5 லிட்டர் புளித்த மோரைச் சேர்க்க வேண்டும். இக்கலவையை 7 நாட்கள் நன்கு புளிக்கவிட வேண்டும். ஏழு நாட்களுக்கு பிறகு பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் பயிர்கள்
காய்கறி பயிர்கள் எண்ணெய் வித்து பயிர்கள், பணப்பயிர்கள், பயிர்வகை பயிர்கள், மலர்வகைகள் போன்ற அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
பயன்படுத்தும் முறை
ஒரு லிட்டர் கரைசலுக்கு 9 லிட்டர் தண்ணீர் சேர்த்து பயிருக்குத் காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
பயன்கள்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை ( RSGA ) கிட்டம்பட்டி, கசவணம்பட்டி ( அஞ்சல்).கன்னிவாடி (வழி) திண்டுக்கல் மாவட்டம் Plin cote - 624 705. போன் நம்பர் 0451-2555745, மின்னஞ்சல் - Rsgaseed@gmail.com
வலைதளம் - WWW.L3FTN,COM, rsga.co.in Facebook/ rsgaseed kannivadi. Youtube. – rsga seed
முடிவுரை
அரப்பு மோர் கரைசலை தயாரித்து நம்முடைய வயல்களுக்கு பயன்படுத்தி பூச்சி மற்றும் பூஞ்சாண நோய்களை கட்டுபடுத்தலாம். அது மட்டும் அல்லாமல் பயிர் ஊக்கியாகவும் செயல்படுவதை மற்ற விவசாயிகளுக்கும் எடுத்து கூறுவோம்.