இயற்கை இடுபொருட்கள்
முன்னுரை
E.M கரைசல் என்பது ஒரு லிட்டர் தாய் வித்தை வைத்து தயாரிக்கப்படும் ஒரு நிலவள ஊக்கியாகும். இவற்றை நம்முடைய வயலில் தெளிக்கும் பொழுது மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை பெருக்கும். மண்வளத்தை பாதுகாக்கவும் நுண்ணுயிர்கள் வளர்வதற்கும் E.M கரைசல் பெரிதும் உதவுகிறது. ஆகவே நாம் மண்ணை வளமாக வைத்துக் கொள்வதன் மூலம் மனிதர்கள் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
E.M கரைசல் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்
20 லிட்டர் கொள்ளளவு உள்ள கேன் - 1
வெல்லம் - 1 கிலோ
ஈயம் கரைசல் - 1 லிட்டர்
தண்ணீர் - 18 லிட்டர்
தயாரிக்கும் முறை
முதல் படி
முதலில் வெல்லம் 1 கிலோவை தட்டி துகள்களாக கேனின் உள்ளே கொட்டவும். 9 லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு ஈயம் கரைசல் ஒரு லிட்டர் தாய்வித்தை ஊற்ற வேண்டும். அதன்பிறகு திரும்பவும் 9 லிட்டர் தண்ணீரை ஊற்றி மூடிவிட வேண்டும்.
இரண்டாம் படி
5 நாட்கள் ஆனதும் அவற்றை தினமும் ஒருமுறை திறந்து விட்டு பிறகு மூடி வைக்கனும் 7 நாட்களில் ஈயம் கரைசல் அதிக அளவில் உற்பத்தியாகி விடும் அதன் பிறகு அவற்றை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் பயிர்கள்
அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
பயன்படுத்தும் முறை
ஒரு லிட்டர் கரைசலுடன் 400 லிட்டர் தண்ணீர் கலந்து தண்ணீர் பாயும் பொழுது ஊற்றி விடலாம். அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து மாலை வேளையில் பயிருக்கு தெளிக்க வேண்டும்.
EM கரைசலின் பயன்கள்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை( RSGA)
கிட்டம்பட்டி, கசவணம்பட்டி ( அஞ்சல்).
கன்னிவாடி (வழி)
திண்டுக்கல் மாவட்டம் -624 705.
போன் நம்பர் 0451-2555745,
மின்னஞ்சல்- Rsgaseed@gmail.com
வலைதளம் WWW.L3FTN,COM, rsga.co.in
Facebook/ rsgaseed kannivadi.
Youtube. – rsga seed
முடிவுரை
இது ஒரு இயற்கை முறையில் தயாரிக்கக் கூடிய வளர்ச்சி ஊக்கியாகும். குறைந்த செலவினைக்கொண்டும் குறுகிய நாட்களிலேயேவும் தயாரித்து பயன்படுத்தலாம். எனவே விவசாயிகள் அனைவரும் இவற்றை தயாரித்து பயன்படுத்தி மண் வளத்தையும் சுற்றுபுறத்தையும் பாதுகாக்க முன்வருவோம்.