வாழ்நாள் கல்வி

இயற்கை இடுபொருட்கள்

அமுதக்கரைசல் தயாரித்தல்

இயற்கை இடுபொருட்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


முன்னுரை

அமுதக்கரைசல்  என்பது கால்நடையின் மூலம் கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் ஒரு நிலவள ஊக்கியாகும். இவற்றை நம்முடைய வயலில் தெளிக்கும் பொழுது மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை பெருக்கும். மண்வளத்தை பாதுகாக்கவும் நுண்ணுயிர்கள் வளர்வதற்கும் அமுதக்கரைசல் பெரிதும்; உதவுகிறது. ஆகவே நாம்; மண்ணை வளமாக வைத்துக்கொள்வதன் மூலம் மனிதர்கள் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. 

 

அமுதக் கரைசல் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்

1.  மாட்டுக் கோமியம்               - 1 லிட்டர்
2.  மாட்டுச்சாணம்                     - 1 கிலோ
3.  மாட்டுக் கோமியம்                - 1 லிட்டர்
4.   பனை வெல்லம்(அ) கருப்பட்டி
    (அ )நாட்டு வெல்லம்            - 250 கிராம்
5.  தண்ணீர்                                  - 10 லிட்டர்
6.  பிளாஸ்டிக் டிரம்               - 1 (20 லிட்டர் 
     கொள்ளளவு உள்ளது)

 

 

தயாரிக்கும் முறை

பிளாஸ்டிக் டிரம்மில் 10 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் மாட்டுச்சாணத்தை கரைக்க வேண்டும்.  மாட்டுக்கோமியத்தை ஊற்றி கலக்க வேண்டும் ..பின்பு பனை வெல்லம்(அ) கருப்பட்டி (அ) நாட்டுவெல்லம் இவற்றில் ஏதாவது ஒன்றை 250 கிராம் அளவில் எடுத்துக் கொண்டு நன்கு  பொடியாக்கி அவற்றுடன் கொட்டி நன்கு கலக்கி விட வேண்டும்.  அவை அனைத்தையும்  கட்டியில்லாமல் கரைத்து டிரம்மை மூடி வைத்துவிட வேண்டும். .ஒரு நாளில் கரைசல் தயராகி விடும்.

 

பயன்படுத்தும் பயிர்கள்

காய்கறி பயிர்கள்,பணப்பயிர்கள், எண்ணெய்வித்து பயிர்கள், தானியப்பயிர்கள், பயறுவகை பயிர்கள்,  மரப்பயிர்கள், மலர்கள் சாகுபடி போன்ற அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

 

பயன்படுத்தும் முறை

இக்கரைசலை 1  லிட்டர் கரைசல் 9 லிட்டர்  தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.

 

அமுதக் கரைசலின் பயன்கள்

  • பயிர்களின் வளர்ச்சியை தூண்டும்,பயிர் நன்கு வளரும்.
  • இதைத் தெளித்த உடன் பயிர்களுக்கு(தழைச்சத்து)தழை
  • ஊட்டச்சத்து இலைவழியாக செடிகளுக்கு கிடைக்கச் 
  • செய்கிறது.
  • இலையின் வளர்ச்சி அதிகமாகும்போது பயிர்கள் கிளைகள் அதிகம் தோன்றும்,
  • பூக்கள் பிஞ்சுகள் அதிகமாகி மகசூல் அதிகரிக்கும்.
  • பூச்சிவிரட்டியாகவும் செயல்படுகிறது.

 

 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை( RSGA)
கிட்டம்பட்டி, கசவணம்பட்டி ( அஞ்சல்).
கன்னிவாடி (வழி) 
திண்டுக்கல் மாவட்டம் -624 705. 
போன் நம்பர் 0451-2555745,
மின்னஞ்சல்- Rsgaseed@gmail.com  
வலைதளம் WWW.L3FTN,COM, rsga.co.in
Facebook/ rsgaseed kannivadi.
Youtube. – rsga seed

 

 

முடிவுரை

இயற்கைமுiயில் தயாரித்து பயிர்ரக்கு சிறந்த வளர்ச்சிஊக்கியாகவும் பூச்சியை விரட்டக் கூடியதாகவும் இக்கரைசல் இருப்பாதாலும் இவற்றை குறைந்த நாளிலேயே தயாரிப்பதாலும் விவசாயிகள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இக்கரைசலை விவசாயிகள் அனைவரும் தயாரித்து பயன்படுத்த முன்வருவோம்.