இயற்கை இடுபொருட்கள்
முன்னுரை
தாவர இலைச்சாறு தயாரிக்க தேவைப்படும் பொறுட்கள் நம்முடைய வயலக்கு அருகாமையில் கிடைப்பதாலும் எளிய தயாரிக்கப்படும் ஒரு பூச்சி விரட்டியாகுதம் இவற்றை நம்முடைய வயலில் தெளிக்கும் பொழுது மண்வளத்தை பாதுகாக்கவும் பூச்சிகளை விரட்டவும் பெரிதும்; உதவுகிறது. ஆகவே நாம்; மண்ணை வளமாக வைத்துக்கொள்வதன் மூலம் மனிதர்கள் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்
வேம்பு, நொச்சி, எருக்கு - 5 கிலோ
ஆடாதொடை,ஆடுதின்னாப்பாலை - 5 கிலோ
பசு மாட்டுக்கோமியம் - 1 லிட்டர்
தண்ணீர் - தேவையான அளவு
பிளாஸ்டிக் டிரம் - 20 லிட்டர் கொள்ளளவு
தயாரிக்கும் முறை
முதல்படி
வேம்பு, நொச்சி, ஆடாதொடை, ஆடுதின்னாப்பாலை எருக்கு, ஆவாரை, மஞ்சணத்தி போன்ற இலைகளை வெட்டி நொறுக்கி பிளாஸ்டிக் டிரம்மில் போட்டுக்கொள்ள வேண்டும்.
இரண்டாம் படி
மாட்டுக்கோமியம் 1 லிட்டரை ஊற்ற வேண்டும்.பின்பு அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
மூன்றாம் படி
இந்தக் கலவையை காலையிலும்,மாலையிலும் குச்சியை கொண்டு நன்கு கலக்கி விட வேண்டும்.3 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.இப்போது கரைசல் தயாராகிவிடும்.
பயன்படுத்தும் பயிர்கள்
அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
பயன்படுத்தும் முறை
10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற விகித்தில் கலந்து பயிர்களுக்கு மாலை வேளையில் தெளிக்கலாம். நடவு செய்யும் அனைத்து பயிர்களுக்கும் 15 நாட்களுக்கு 1 முறை தொடர்ந்து தெளிக்கலாம்.
பயன்கள்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை( RSGA)
கிட்டம்பட்டி, கசவணம்பட்டி ( அஞ்சல்).
கன்னிவாடி (வழி)
திண்டுக்கல் மாவட்டம் -624 705.
போன் நம்பர் 8870392422
மின்னஞ்சல்- Rsgaseed@gmail.com
வலைதளம் WWW.L3FTN,COM, rsga.co.in
Facebook/ rsgaseed kannivadi.
Youtube. – rsga seed
முடிவுரை
இயற்கைமுறையில் தாவர இலைக்சாறு தயாரித்து பயிருக்கு பயன்படுத்துவதால் இவை ஒரு சிறந்த பூச்சி விரட்டியாகும் இவற்றை குறைந்த நாளிலேயே தயாரிக்க முடியும் விவசாயிகள் தொடர்ந்து தாவர இலைசாறை பயன்படுத்தி வந்தால் பயிர்களை; பூச்சி நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.