இயற்கை இடுபொருட்கள்
முன்னுரை
தேங்காய் பால் மோர்க் கரைசல் என்பது ஒரு பயிர்வளர்ச்சி ஊக்கியாகும். இவற்றை நம்முடைய வயலில் தெளிக்கும் பொழுது பயிர் வளர்ச்சி துரிதமாக இருக்கும் பூக்கும் திறனை அதிகரிக்கும் மண்வளத்தை பாதுகாக்கவும் நுண்ணுயிர்கள் வளர்வதற்கும் பெரிதும் உதவுகிறது. மண் வளமாக இருக்கும் பயிர் செழித்து வளர்வதற்கும் உதவி புரிகிறது. மனிதர்கள் மட்டுமல்லாது மற்ற உயிரினங்களும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
தேங்காயப்பால் மோர் கரைசல் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்
மண்பானை - 1
நன்கு புளித்த மோர் -5 கிலோ
தேங்காய் - 10
தண்ணீர் - 5 லிட்டர்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு மண்பானையை எடுத்துக்கொள்ள வேண்டும்.பின்பு அதில் 10 தேங்காயையும் உடைத்து துருவி ஆட்டி அதில் 5 லிட்டர் தண்ணர் கலந்த பால் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காய் உடைத்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மண்பானையில் நன்கு புளித்த மோர் 5 லிட்டர் மற்றும் தேங்காய்பால் 5 லிட்டர் இரண்டையும் ஊற்றி நன்கு கலக்க வேண்டும். கலந்து 7 நாட்கள் வரை ஊறவிட்டு தினமும் கலக்கி விட வேண்டும் ஏழு நாட்களுக்குள் கரைசல் தயாராகிவிடும். பயிர்களுக்கு எடுத்து பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் பயிர்கள்
பயன்படுத்தும் முறை
காய்கறி பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் தானியப்பயிர்கள், பயறவகைபயிர்கள், பணப்பயிர்கள் மலர்கள் போன்ற அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
பயன்கள்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை( RSGA )
கிட்டம்பட்டி, கசவணம்பட்டி ( அஞ்சல்).
கன்னிவாடி (வழி)
திண்டுக்கல் மாவட்டம் -624 705.
போன் நம்பர் 0451-2555745,
மின்னஞ்சல் - Rsgaseed@gmail.com
வலைதளம்; WWW.L3FTN,COM, rsga.co.in
Facebook/ rsgaseed kannivadi.
Youtube. – rsga seed
முடிவுரை
தேங்காய்பால் மோர்கரைசல் தயாரித்து பயன்படுத்துவதால் நமக்கு செலவும் குறையும் பயிர்கள் நன்கு செழித்து வளரும். இவற்றை தெளிப்பதால் பயிர்கள் அனைத்தும் ஓரே சீராக இருக்கும். நல்ல வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது ஆகவே மேற்கண்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தயாரித்து பயன்படுத்தி வந்தால் விவசாயத்தில் நல்ல மகசூல் எடுக்கலாம்.