கால்நடை வளர்ப்பு
முன்னுரை
பால் காய்ச்சல் என்று பரவலாக பேசப்படும் இது ஒரு சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறையாகும். பொதுவாக இந்த பாதிப்பு முதல் மற்றும் இரண்டாவது ஈற்று ஈன்ற பால்மாட்டைத் தாக்குவதில்லை மூன்றாவது ஈற்று மற்றும் அதற்குமேல் கன்று ஈன்ற பால் மாட்டைத் தாக்குகிறது. பொதுவாக சினைகாலத்தில் பால் மாட்டை சரிவர பராமரிக்காததும் ஒரு காரணம் அத்துடன் கன்று ஈன்ற உடன் சீம்பாலுடன் அதிக கால்சியம் எனப்படும் சுண்ணாம்புச் சத்து வெளியேறுவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த பாதிப்பு கன்று ஈன்ற ஒரு சில தினங்களுக்குள் ஏற்படும்.
பால் காய்ச்சலுக்கான அறிகுறிகள்
பால் காய்ச்சல் வராமல் தடுக்கவழி முறைகள்
பால் காய்ச்சலை சரி செய்ய மருத்துவம்
பாதிப்பிற்கு உள்ளான பால்மாடு நடக்க இயலாத நிலையில் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவரை வரவழைத்து மருத்துவம் செய்ய வேண்டும். மருத்துவர் பாதிப்பிற்கு உள்ளான பால்மாட்டிற்கு கால்சியம்சத்து ஊசியை நரம்பு வழியாக இரத்தத்தில் செலுத்துவார். நரம்பு வழியாக கால்சியம் ஊசி செலுத்திய உடன் பால் மாடு
சுண்ணாம்புக் கரைசல் தயார் செய்து பயன்படுத்தும் முறை
பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ சுண்ணாம்புக் கல்லை இட்டு கலக்கி விடவும். தெளிந்த சுண்ணாம்பு நீரை ஒரு டம்ளர் அதவாது 50 மிலி காலை மற்றும் மாலையில் 1 லிட்டர் வீதம் கன்று ஈனுவதற்கு முன் 10 தினங்களுக்கும் கன்று ஈன்ற பின் பத்து தினங்களுக்கும் கொடுத்து வரவும். இரவில் இரண்டு லிட்டர் நீரை ஊற்றவும் இவ்வாறு ஒருவாரம் பயன்படுத்திய பின் தேவையெனில் மீண்டும் 10 லிட்டர் நீரில் ஒரு கிலோ சுண்ணாம்புக் கல்லை இட்டு சுண்ணாம்புக் கரைசல் தயார் செய்யவும்.
பாரம்பரிய முறையில் பால் காய்ச்சல் வராமல் பாதுகாக்க அகத்திக் கீரை வழங்குதல்
பால் காய்ச்சல் வராமல் தடுக்க கால்நடைகளுக்கு குறிப்பாக கறவை பசுக்களுக்கு தினந்தோறும் கைப்பிடியளவு அகத்திக் கீரை வழங்கி வந்தால் பால் மாட்டிற்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.
தொகுப்புரை
பால்மாடு வளர்ப்போர் எளிய முறையில் கால்சியம் சத்து கிடைக்க வாய்க்கால் ஓரத்திலும் வீட்டின் கழிவு நீர் செல்லும் இடங்களில் அகத்திமரம் வளர்ப்பதன் மூலம் குறைந்த செலவில் தேவையான கால்சியம் சத்து கிடைக்க வகை செய்யலாம். மேலும் பால் காய்ச்சல் தீவிரமாக இருந்தால் உடனடியாக தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரை அணுகி முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும்.